News Article

காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து கிளிநொச்சியில் விசாரணை நடவடிக்கை

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் (OMP) கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 243 பேரிடம் நேற்று (13) விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 243 பேரிடம் குறித்த விசாரணை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 128 பேரிடமும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 17 பேரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 50 பேரிடமும், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 48 பேரிடமும் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment