News Article

புதையல் தோண்டியவர் வவுனியாவில் கைது

வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட குற்றச்சாட்டில் ஒருவரை நேற்று (20) அதிகாலை கைதுசெய்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது அவரிடம்இருந்து புதையலை கண்டறிவதற்காக பயன்படுத்தபடுத்தப்படும் ஸ்கானர் கருவி உட்பட மண் அகழ்வதற்கான உபகரணங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக ஓமந்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 54 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை (20) நேற்று வவுனியாநீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுன். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment