News Article

முல்லைத்தீவில் யானை தந்தங்களுடன் இருவர் கைது.

முல்லைத்தீவு மாங்குளம், பனிக்கங்குளம் பிரதேசத்தில் யானை தந்தங்களுடன் நேற்று இரவு (14) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மாங்குளம் விஷேட அதிரடிப்படையினரும் இராணுவ புலனாய்வவினரும் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் யானை தந்தங்களும், தந்தங்களை வைத்திருந்த இருவரும் விஷேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டு மாங்குளம் பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மாங்குளம் பொலீஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு கைது செய்யப்பட்ட இருவரையும் யானைத் தந்தங்களையும் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மாங்குளம் பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment