News Article

கண்ணகிபுரம் இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம் டக்ளஸினால் அங்குரார்ப்பணம்

நாடளாவிய ரீதியில் மாவட்டத்திற்கு ஒரு கிராமம் என்றதன் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவாகியுள்ள கண்ணகிபுரம் இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வு நேற்று(20.07.2024) இடம்பெற்றுள்ளது. அத்துடன்,  குறித்த கிராமமானது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்மொழிவிற்கு அமைவாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.  இதேவேளை, நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

Leave a Comment