News Article

முல்லைத்தீவில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்ட அமெரிக்க தூதரக அதிகாரிகள்

முல்லைத்தீவு(Mullaitivu) மாவட்டத்தின் அம்பகாமம் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை அமெரிக்க தூதரக அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர்.குறித்த விஜயமானது நேற்று(12.07.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது வெடிபொருள் அகற்றலில் இருக்கின்ற நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் கிளிநொச்சியில் வைத்து கலந்துரையாடியுள்ளனர். மேலும், முல்லைதீவு அம்பகாமம் பகுதியில் கண்ணி வெடி அகற்றும் பகுதிகளை சென்று பார்வையிட்டு அதன் நிலைமைகள் தொடர்பில் கிளிநொச்சியில் அமைந்துள்ள டாஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் கேத்தரின்(Katherine), பாஸ்கர் (M.Bsker) ( US PM/WRA Branch Chief), கீத் கிளார்க் ( Keith Clark)( Programme Manager) சந்தீப் குரூஸ்( Santheep Croos) உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றுள்ளனர்.

Leave a Comment